கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் கலப்பு மருந்து!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களுக்கு செலுத்தபடும் கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை கலந்து செலுத்தும் முறை பலனை அளிக்குமா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசிகள்:
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டில் தற்போது 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைவரும் கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் இரு தவணை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. தற்போது இந்த கோவாக்சின் தடுப்பூசி 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு நிறுவன தடுப்பூசிகளின் பயன்பட்டால் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந் உடலை பாதுகாக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை கலந்து செலுத்தும் முறை பலனை அளிக்குமா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசின் புதிய செயலி!
இந்த ஆய்வில் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாம் தவணையாக கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தினால் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்து தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 400 பேரை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2 டோஸ் தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்தும் போது செயல்படுவதை விட எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.