ஆவினின் புதிய அறிமுகம்: டிலைட் பால் – 3 மாதங்களுக்கு கெடாது!
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த முறையில் பால் விநியோகம் செய்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக பால் விற்பனை அளவும் அதிகரித்து உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ஆவின் டிலைட்’ எனும் புதிய பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆவின் டிலைட் :
தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பசும் பாலை கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. அது மட்டுமல்ல பால் சார்ந்த நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆபர்களும் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்த விலை குறைவால் ஆவின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் ஆவின் டிலைட் எனும் 90 நாட்கள் வரை பயன்படுத்தும் புதிய பாலை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலை எவ்வித குளிர்சாதன வசதியும் இல்லாமல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
தற்போது நிலவி வரும் மழை காலத்தில் பொதுமக்கள் பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இத்தகைய நேரத்தில் நாம் ஒரு முறை இந்த பாலை வாங்கி வைத்து அதிக நாட்கள் பயன்படுத்தலாம். அத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த பால் ஏற்றது என்கிறார்கள். இந்த ஆவின் டிலைட் 500 மி.லி. பாக்கெட்டின் விலை ரூ.30 ஆகும். எவ்வித வேதி பொருட்களும் கலப்படம் செய்யாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.