தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

0
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பல நூற்றாண்டுகளாக பிரம்மாண்டமான கலைப்படைப்புகளில் ஒன்றாக தஞ்சை பெரியக் கோவில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

முதல்வர் அறிவிப்பு:

தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரமாண்டமாய், தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்டும் விதமாக அமைத்திருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் சிறந்த வரலாறு சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1,037-வது சதய விழா இந்த ஆண்டு இன்று (நவ. 2 ) கொண்டாடப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய ராஜாராஜா சோழனின் முடி சூடிய தினத்தை சதய விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் தொடங்கும் ஆன்லைன் வகுப்புகள் – தனியார் பள்ளிகள் தீவிரம்!

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு விழாவுக்கு கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதன் பின் இன்று கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கவியரங்கம், பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்நிலையில் தமிழர் பெருமையை போற்றும் வகையில் ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில் இருப்பதால், ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் பேசிய அவர் தஞ்சையில் உள்ள ராஜராஜ சோழனின் மணி மண்டபமும் பொலிவூட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!