வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!

0
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் - ஆகஸ்ட் 1 முதல் அமல்!
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் - ஆகஸ்ட் 1 முதல் அமல்!
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!

மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை ஏப்ரல் 1, 2023 க்குள் தன்னார்வ அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் பெயர்கள் முன்னதாக உள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ளவர்களிடம், பதிவை சரிபார்க்கவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் உள்ளதா என்பதை அடையாளம் காண ஆதார் எண்களை தேர்தல் பதிவு அதிகாரிகள் கேட்கவும் அனுமதிக்கிறது. அதே நேரத்தில், ஆதார் எண் இல்லை என்ற காரணத்துக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மறுக்க கூடாது என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்கக் கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் விதிமுறை சட்டத்திருத்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் ஆக 1 முதல் அமலுக்கு வரும் என ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் மீனா அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் வாக்காளர் பதிவு மற்றும் பல்வேறு படிவங்களில் தேர்தல் ஆணையம் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அவர் வியாழக்கிழமை தெரிவித்தார். அதாவது புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம்-6 பயன்படுத்தப்படும். படிவம்-7 வாக்காளர் பெயரை நீக்குவதற்காக, இறப்புச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். படிவம்-8, சட்டமன்ற தொகுதிகளுக்குள் வாக்காளர் பெயரை மாற்றுவதற்கும், புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கும், அத்தகைய வாக்காளர்களின் உடல் ஊனத்தை கண்டறிவதற்கும் ஆகும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை ஏப்ரல் 1,2023க்குள் தன்னார்வ அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக வரும் மாணவர்களுக்கான அறிவிப்பு – அமைச்சர் தகவல்

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் நலனுக்காக, ECI அவர்களின் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க படிவம்-6B ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, புதிய படிவம் ECI மற்றும் பிற இணையதளங்களில் ஜூலை இறுதிக்குள் கிடைக்கும். மேலும் வாக்காளர்கள் படிவம்-6B ஐ ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ECI க்கு சமர்ப்பிக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்களை சேகரிப்பதுடன், ஆதார் எண்களைச் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், தங்களின் ஆதார் எண்களைச் சமர்ப்பிக்க முடியாத வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க, படிவம்-6 பியில் குறிப்பிடப்பட்டுள்ள 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விதிமுறைகளின்படி வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆதார் எண்களுக்கு ரகசியம் காக்கப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!