தனியார் பள்ளி வாகனங்களில் புதிய வசதி? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் விரைவில் வர இருக்கிறது. இந்த திட்டம் அமல்படுத்தும் வரைக்கும் மாணவர்கள் இலவச பேருந்து அட்டை மூலமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளி வாகனம்
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக அரசு சில திட்டங்களை வகுத்து வருகிறது. அதாவது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது அந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த புதிய சிறப்புத் திட்டத்தால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய தடை? மத்திய அரசின் உத்தரவு!
மேலும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது தனியார் பள்ளி வாகனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கேமரா பொருத்த வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலுமே இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளவா என்பதை அரசு அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். மேலும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச ஸ்மார்ட் கார்டுகள் வரும் வரைக்கும் மாணவர்கள் இலவச பயண அட்டைகள் மூலமாகவே பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.