ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய தடை? மத்திய அரசின் உத்தரவு!
இந்தியாவில் பெருகி வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளை கருத்தில் கொண்டு இது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் இப்பதிவில் காணலாம்.
ஒளிபரப்பு தடை
சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பண இழப்பு, மோசடி போன்ற காரியங்கள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மறுபக்கத்தில் பலர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதனால், இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு தடை விதித்து மத்திய அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
TCS நிறுவனத்தில் BA & B.Sc பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது ஆன்லைன் மூலம் விளையாடும் சூதாட்டங்கள் சட்டவிரோதமானது என்றும் இந்த விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசு கருதுகிறது. குறிப்பாக இந்த விளையாட்டுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதில் உள்ள நிதி அபாயங்கள் பெரும் பின்விளைவுகளை உருவாக்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த காரணங்களை முன் வைத்து ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யவோ, அதை பிரபலப்படுத்தவோ கூடாது என்று ஊடகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் 1867ன் கீழ் பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்கள், தனியார் செயற்கைக்கோள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது’ என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.