தமிழகத்தில் அனைத்து பள்ளி பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அவ்வப்போது பள்ளி பேருந்துகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. இதையடுத்து பல்வேறு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பற்றி பார்ப்போம்.
பள்ளிப்பேருந்து
தமிழகத்தில் வாகன விபத்துகள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அந்த பள்ளி நிர்வாகமே தனது பேருந்துகளில் பள்ளிகளுக்கு அழைத்து வருகின்றனர். அத்துடன் மீண்டும் மாணவர்களின் வீடுகளுக்கும் பேருந்துகளில் அழைத்து செல்கின்றனர். தற்போது பள்ளி பேருந்துகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் தனியார் பள்ளி பேருந்துகளில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களின் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இயங்கி வரும் பேருந்துகள் மற்றும் வேன்களின் முன்புறத்திலும் மற்றும் பின்புறத்திலும் கேமரா மற்றும் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘Home Work’ கொடுக்க தடை – CEO புதிய உத்தரவு!
இதனை கட்டாயமாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அத்துடன் தமிழகத்தில் செயல்படும் அனைத்து விதமான பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் குறையும் என்று கூறப்படுகிறது.