தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘Home Work’ கொடுக்க தடை – CEO புதிய உத்தரவு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'Home Work' கொடுக்க தடை - CEO புதிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'Home Work' கொடுக்க தடை - CEO புதிய உத்தரவு!தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'Home Work' கொடுக்க தடை - CEO புதிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘Home Work’ கொடுக்க தடை – CEO புதிய உத்தரவு!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதை பள்ளி வாரியாக பார்வையிட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

CEO உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களில் அதிகமாக இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முடக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை பள்ளிகளை மூட முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் தமிழக அரசின் கடும் நடவடிக்கையால் கொரோனா நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து கட்டுக்குள் வந்தது. இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது.

மேலும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் பேரில், பள்ளிகள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான, ஆண்டு இறுதித் தேர்வுகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகளில் 2022-20223ம் கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் துவங்கின. மேலும் மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இனி மகளிர் கட்டணமில்லா பயணத்தில் குழப்பம் இல்லை – எளிய சேவை துவக்கம்!

மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பாக அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை கடிதம் எழுதியுள்ளார். அதில், ” பள்ளி கல்வி ஆணையரின் உத்தரவின் பேரில், அனைத்து வகை பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பத்தை தடை செய்யும் பொருட்டு, குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது’, ஆனால் இதுவரை யாதொரு வட்டார கல்வி அலுவலர்களிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும் இவ்வலுவலகத்தில் பெறப்படவில்லை.

Exams Daily Mobile App Download

மேலும் பள்ளி கல்வி ஆணையரிடமிருந்து நினைவூட்டுகள் பெறப்பட்ட வண்ணம் உள்ள நிலையில், பள்ளி கல்வி ஆணையருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப வேண்டி உள்ளதால், இனியும் காலதாமதம் செய்யாமல் இச்செயல்முறைகள் கிடைக்க மறு அஞ்சலில் அனைத்து வட்டார அலுவலர்களும், கடந்த மூன்று மாதங்களில் பள்ளிகளை பார்வையிட்டதன் அடிப்படையில் தேதியுடன் இவ்வலுவலக்திற்கு (11.08.22)க்குள் அனுப்பிவைக்க அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பார்வையிட்ட பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதை பள்ளி வாரியாக அறிக்கையில் குறிப்பிட அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!