Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!
இந்திய தபால் துறை வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் டோல் ஃபிரீ நம்பரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் வீட்டிலிருந்தே எளிதாக திட்டம் பற்றிய சந்தேகங்களை கேட்டறிய முடியும்.
அஞ்சல் நிலையம்:
அஞ்சல் துறை மக்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்புக்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலகத் திட்டங்கள் சிறந்த வழியாக உள்ளது. போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள் கையில் 100 ரூபாய் இருந்தால் போதும் அதற்கேற்றவாறு உள்ள திட்டத்தில் சேரலாம். அதனால் தான் சாமானிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம், கிராம சுராக்ஷ யோஜனா போன்ற திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.
IPL 2022: டெல்லி கேபிட்டல்ஸ் அணி மெகா ஏலத்தில் குறிவைக்கும் வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த நிலையில் அஞ்சல் துறை தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவும் புதிய சேமிப்பு திட்டங்களையும், பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் போஸ்ட் பேமெண்ட் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பிரீமியம் தொகையை செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஐ.வி.ஆர். சேவையை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் தபால் நிலைய சேவைகளை பெற முடியும். இதற்காக 18002666868 என்ற டோல் ப்ரீ நம்பரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே NTPC 35000 காலிப்பணியிடங்கள் – பீகாரில் பற்றி எரியும் சர்ச்சை! வலுக்கும் போராட்டங்கள்!
இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் திட்டத்தின் வட்டி லாபம், ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது, புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறியலாம். தபால் நிலைய திட்டங்களில் நீங்கள் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து இருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும். இந்தி மொழிக்கு எண் 1 ஐ அழுத்தவும். ஏடிஎம் தொடர்பான சேவைகளுக்கு எண் 2 ஐ அழுத்தவும், சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிய 5 ஐ அழுத்தவும். இந்த ஐ.வி.ஆர். சேவை அஞ்சலக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.