ரயில்வே NTPC 35000 காலிப்பணியிடங்கள் – பீகாரில் பற்றி எரியும் சர்ச்சை! வலுக்கும் போராட்டங்கள்!
பீகார் மாநிலத்தில், ரயில்வே தேர்வு முறையில் பிரச்சனை இருப்பதாக, தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வு எழுதிய தேர்வர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அனைவர் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வர்கள் நடத்திய போராட்டம்:
இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்றின் வேகம் குறைந்து வருவதால் மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் ரயில்வே வாரியமானது, ரயில்வே மண்டலங்களில் நிலைய மேலாளர், ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 35,000 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மொத்தமாக கிடைக்கும் நிலுவைத்தொகை! முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து இந்த தேர்வுகள் 2020 மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு கொரோனா இரண்டாம் அலை அதிகரித்ததால் மீண்டும் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த 35 ஆயிரம் பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர், இந்த நிலையில் 2020 ஏப்ரல் – ஜூலை மாதத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் CBT-1 எனும் தேர்வு 133 ஷிப்டுகளாக 68 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 14 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!
தேர்வு முறையில் பிரச்சனைகள் இருப்பதாக தேர்வு எழுதிய தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்கள் பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கயா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீது கல்லெறிந்து ரயில்களுக்கு தீ வைத்தனர். இந்த வகையில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அதற்கு சுமூக தீர்வு காணப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வலியுறுத்தியுள்ளார்.