IPL 2022: டெல்லி கேபிட்டல்ஸ் அணி மெகா ஏலத்தில் குறிவைக்கும் வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த ஆண்டு தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடரின் மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12 தேதி தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் பல வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்து வருகிறது. இதை தொடர்ந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி முக்கியமான 3 வீரர்களை குறிவைத்துள்ளது.
IPL 2022:
IPL ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக BCCI சமீபத்தில் அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. தற்போது வீரர்களுக்கான ஏலமும் துபாயில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் முடிவாக இந்தியாவில் ஏலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு IPL யில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏலத்தில் எந்த அணி எந்த வீரரை எடுக்கப் போவது என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த ஆண்டு IPL தொடரில் ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று BCCI அறிவித்திருந்தது. அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பண்ட் , அக்சர் படேல் ,ப்ரிதிவி ஷா மற்றும் தென்னாபிரிக்கா வீரர் நோர்ட்ஜே என மொத்தம் 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி தக்க வைக்கவில்லை. இதனால் அவர் மெகா ஏலத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 2020 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐயர் தலைமையில் டெல்லி அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
கடந்த ஆண்டு சன்ரைஸஸ் அணிக்காக விளையாடிய மனிஷ் பாண்டியை சன்ரைஸஸ் அணி தக்க வைக்கவில்லை. இதனால் அவர் மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளார். இதை தொடர்ந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் மெகா ஏலத்தில் மனிஷ் பாண்டியை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு IPL தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இடம்பெற்ற ராயல் சேலஞ்சர்கள் அணி வீரர் படிக்கலை ஏலத்தில் எடுக்க டெல்லி அணி திட்டமிட்டு வருகிறது. இதை தொடர்ந்து மும்பை அணியின் ராகுல் சாகர் சிறப்பான பார்மில் இருப்பதால் டெல்லி அணிக்கு அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.