மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பஸ்தர் காடுகளில் அமைந்த மாவட்டத்தின் ஜெக்தால்பூரில் தேசியக் கொடியை முதல்வர் பூபேந்தர் பகேல் ஏற்றினார். இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு:
இந்திய நாட்டின் 73வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்வார்கள். மேலும் இவ்விழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு பதக்கங்களும், விருதுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேந்தர் பகேல் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொதுமக்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ரயில்வே NTPC 35000 காலிப்பணியிடங்கள் – பீகாரில் பற்றி எரியும் சர்ச்சை! வலுக்கும் போராட்டங்கள்!
இதில் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். இத்திட்டம் மூலமாக கூலித் தொழிலாளியின் முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ.20000 தேசிய வங்கிகளின் வைப்பு தொகை செலுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனிப்பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஓய்வூதியதாரக்ளுக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் பங்கை 10% இருந்து 14% உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!
மேலும் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் கூறியதாவது, அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை என வாரத்தில் ஆறு நாட்கள் பணி புரிந்து வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களின் வேலை நாட்கள் ஐந்து தினங்களாக குறைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் வேலைக்கு வர வேண்டும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.