தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!

0
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் ஒரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒரு முக்கிய முடிவை அரசு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கைகளாக மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜனவரி மாதத்தில் 3 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் பத்திரிகைகளை காண்பித்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் 10 -12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!

அதனை தொடர்ந்து அவசர தேவைகளுக்கு சொந்த வாகனங்களில் பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. அதனால் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததாதலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததாலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு விட்டது.

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!

அதே போல தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று குறைந்து வருவதால் வார இறுதி ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒரு முக்கிய முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!