தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிருப்தி!
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமன முறை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி:
நாட்டின் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அனுப்சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் இருவர்களின் பதவி காலியாக இருந்த நிலையில் மத்திய அரசு உயர்நிலை ஆலோசனை குழுவின் மூலமாக ஐஏஎஸ் அதிகாரி ஞானேஷ் குமார் மற்றும் எஸ் எஸ் சாந்து ஆகிய இருவர்களையும் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் மத்திய அரசு கடைபிடித்த நடைமுறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 பகுதிகளில் மார்ச் 25 ஆம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தேர்தல் ஆணையர் பதவிக்கு 200 பேர் தகுதியானவர்கள் பட்டியலில் உள்ள நிலையில் ஆறு பேரை சில மணி நேரங்களில் எப்படி தேர்வு செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் தகுதி, பின்னணி உட்பட முழு விவரங்களும் தேர்வுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் சாசன பதவிக்கு ஒரு நபர் தேர்வு செய்யப்படும்போது நேர்மையாகவும், வெளிப்படுத்தன்மையுடனும் அதன் செயல்முறை இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.