உருவாகும் புதிய புயல் – வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இது வரும் 24ம் தேதி புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை :
இந்தியாவில் கடந்த 4 வருடங்களாகவே அதிக புயல்கள் உருவாகிறது. கடலின் நீர்மட்டம் உயர்வு, கடலின் உப்பு தன்மை, அமைவிடம் இவை அனைத்தும் புயல் ஏற்பட காரணங்கள் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை காலம் நிலவுகிறது. இதனால் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இந்த வெப்பச்சலனம் காரணமாக அதிக இடங்களில் மழைப்பொழிவு காணப்படுகிறது.
தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பொன்முடி வெளியீடு!
தற்போது அரபிக்கடலில் அதிக காற்றழுத்தம் காரணமாக டவ் தே புயல் உருவானது. இந்த புயலானது கடலோர பகுதிகளில் கன மழையை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் அதிக வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி, கடலூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. மேலும் குஜராத் மாநிலத்தில் தீவிர புயலாக உருவாகி அதிக சேதத்தை ஏற்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 24ம் தேதி புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தமான் ஒட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் மேலும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.