நாடு முழுவதும் கொரோனாவால் 329 மருத்துவர்கள் இறப்பு – மருத்துவ சங்கம் அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 329 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் இறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பல மாநில அரசுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவாகும் புதிய புயல் – வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை!
மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகமாக உள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள 329 மருத்துவர்கள் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் 30 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள் தான். மேலும் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 80 மருத்துவர்கள் இறந்துள்ளனர்.