தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கண்காணிப்புக் குழு அமைப்பு!
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய் மற்றும் பிற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் திமுக தலைமையிலான அரசு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கியது. மேலும் கொரோனா நிவாரணத் தொகைகளும் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – தினசரி ரூ.11 வீதம் VDA உயர்வு!
அப்போது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இங்கு மாதந்தோறும் வழங்கப்படும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களில், கல், மண், தூசு போன்ற பொருட்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Exams Daily Mobile App Download
அதனால் மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கடை பணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று உணவுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம்தோறும் முதல் மற்றும் 3வது திங்கள் கிழமைகளில் இந்த குழு கூடி, நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும் சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் ஆணையருக்கு அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.