மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – தினசரி ரூ.11 வீதம் VDA உயர்வு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாறும் அகவிலைப்படி (VDA) தொகையை ஒரு நாளைக்கு ரூ.11 வீதம் உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
DA உயர்வு
ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து வகை அரசு ஊழியர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.11 வீதம் வேரியபில் அகவிலைப்படியை (VDA) அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களுடன் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு அறிவிப்பில், ஒடிசாவின் தொழிலாளர் ஆணையர் டாக்டர். என்.திருமலா நாயக், ‘மாறும் அகவிலைப்படி (VDA) தொகை ஒரு நாளைக்கு ரூ.11 என முழுமைப்படுத்தப்பட்ட பிறகு திறமையற்ற, அரை திறமையான, திறமையான ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
மாநிலத்தில் காலை 6 மணிமுதல் 9 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய உத்தரவு!
ஏப்ரல் 1, 2022 முதல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்துடன் கூடுதலாக 89 திட்டமிடப்பட்ட வேலைகளிலும் உள்ள திறமையான பணியாளர்கள் DA உயர்வை பெறுவார்கள்’ என்று கூறியுள்ளார். இப்போது தொழிலாளர் ஆணையத்தின்படி, VDA உடன் புதிய குறைந்தபட்ச ஊதியம் ஏப்ரல் 1, 2022 முதல் திறமையற்ற ஊழியர்களுக்கு ரூ.326 ஆகவும், அரை திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.366 ஆகவும் இருக்கும். மேலும், VDA உடன் ஊதியம் ரூ.416 ஆகவும், திறமையான மற்றும் அதிக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு ரூ.476 ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது மாநிலத்தில் குறைந்தபட்ச ஊதிய வாரியம், தொழில்துறை தொழிலாளர்களுக்கான சிபிஐ எண்ணில் (அடிப்படை 2001-100,) ஒரு புள்ளி உயர்வுக்கு VDA @ ரூ.0.90 என அழைக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவை மறுசீரமைப்பு செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், டிசம்பர் 31, 2021 நிலவரப்படி தொழில்துறை ஊழியர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 345.21 லிருந்து 357.65ஐ எட்டியதன் அடிப்படையில் ஏப்ரல் 1, 2022 இல் தொடங்கும் அரையாண்டுக்கான VDA செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.