தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டணங்கள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கு புதிய கட்டணங்களை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய பென்சன் திட்டம்
இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கென்று தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து 2009ம் ஆண்டில் அனைத்து பொதுமக்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று கொண்டு வரப்பட்டது. இதில் 18 வயது முதல் 65 வயதுடையவர்கள் வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் 8% முதல் 10% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு! யார் யாருக்கு பலன்?
மேலும் இதில் தினமும் 50 ரூபாய் சேமித்தால் மாதந்தோறும் 1500 ரூபாய் முதலீடாக செலுத்த வேண்டும். ஓய்வு காலத்தில் 9000 ரூபாய் வரை பெற முடியும். அதன்படி ஒரு வருடத்திற்கு சேமிப்புதாரர்கள் ரூ.1,08,000 வரை பெற முடியும். தற்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கு பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அனைத்தும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த முடியும்.
144 தடை உத்தரவு அமல் – 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அதன்படி இதில் புதிய பதிவை மேற்கொள்ள 200 முதல் 400 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் புதிய மற்றும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கு பங்களிப்பு தொகையில் 0.50% செலுத்த வேண்டும். அதாவது குறைந்தபட்சமாக 30 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25000 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அத்துடன் இதில் குறைந்தபட்ச பங்களிப்பு தொகை ரூ.1000 முதல் ரூ.2999 வரை செலுத்துபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும். இதே போல் ரூ.3000 முதல் ரூ.6000 வரை செலுத்துபவர்களுக்கு 75 ரூபாய் ஒரு ஆண்டுக்கு வசூலிக்கப்படும். அத்துடன் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பங்களிப்பு தொகை 6000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால் ஒரு ஆண்டுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.