மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு! யார் யாருக்கு பலன்?
மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகளவு சம்பளத்துடன் அகவிலைப்படி உள்ளிட்ட பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் என்னென்ன, யாருக்கு எல்லாம் கிடைக்கிறது என்பதை இப்பதிவில் காணலாம்.
சிறப்பு சலுகை
பொதுவாக கழுதை மேய்த்தாலும் கவர்மெண்ட் கழுதையை மேய்க்க வேண்டும் என்று சொல்ல கேட்டிருப்போம். ஏனென்றால் அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு அதிகளவு ஊதியம், சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் பலரும் அரசு வேலையில் அமர வேண்டும் என்று எண்ணுவது உண்டு. ஆனால் இந்த கால கட்டத்தில் அரசு வேலை என்பது பலருக்கும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மறு பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (DA), வாடகை அலவன்ஸ், பயணப்படி, கல்வி ஊக்கத் தொகை, மருத்துவ அலவன்ஸ் என பல சலுகைகளை பெற்று வருகின்றனர்.
144 தடை உத்தரவு அமல் – 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இதில் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் சம்பள உயர்வுடன், இது போன்ற ஊக்கத்தொகையும் அதிகமாக கிடைத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் ஊக்கத்தொகை இதனால் கிடைக்கும் பலன் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம். இதில் முக்கியமானது மத்திய அரசு ஊழியர்களின் உயர்கல்விக்காக வழங்கப்படும் சில சலுகைகள் தான். அதனால் பணியில் இருக்கும் போது ஒரு ஊழியர் Phd போன்ற உயர்கல்வியை படிக்கும் போது சுமார் 5 மடங்கு அளவில் ஊக்கத்தொகை பெறலாம்.
அதாவது கல்விக்கான ஊக்கத்தொகை தற்போது ரூ.10,000 லிருந்து ரூ.30,0000 ஆக அதிகரித்துள்ளது. இதற்காக மத்திய அரசின் பணியாளர் அமைச்சகம் 20 ஆண்டுகால விதிகளை திருத்தம் செய்துள்ளது. முன்னதாக பணியில் இருந்து கொண்டு பட்டப்படிப்பு பெற விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.2000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்பட்டது. இந்த திருத்தத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற இருக்கும் கூடுதல் சலுகைகளை கீழே விரிவாக காணலாம்.
- 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான டிப்ளமோ படிப்பிற்கு – ரூ.10,000
- 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு – ரூ.15,000
- 1 வருடம் அல்லது அதற்கு குறைந்த முதுகலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகளுக்கு – ரூ.25,000
- Phd அல்லது அதற்கு இணையான படிப்புகளுக்கு – ரூ.30,000
ஆனால் முறையான கல்வித்தகுதிக்கான பட்டங்கள் அல்லது இலக்கியங்களில் மேற்படிப்பு பெறுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதே போல மத்திய அரசு ஊழியர்கள் அவர்களது பதவியுடன் தொடர்புடைய பட்டமோ அல்லது டிப்ளமோ படிப்பை படிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் அடுத்த பணிக்கான தொடர்புடையதாக இருக்க வேண்டும். இந்த திருத்தங்கள் அனைத்தும் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.