குடித்துவிட்டு மீனாவிடம் காதலை சொல்லி கலாட்டா செய்த ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளும் ஜோடியான மீனா ஜீவா இருவருக்கும் அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இன்றைய எபிசோடில் ஜீவா தனது காதலை மனைவி மீனாவிடம் சொல்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 4 ஜோடிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியான மீனா மற்றும் ஜீவா இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளும் படி தான் காட்சிகள் வரும். இவர்கள் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வது தான் இவர்களின் ஸ்பெஷல். மற்ற ஜோடிகள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக பேசிக் கொள்ளும் போது கூட இவர்கள் இருவரும் சண்டை தான் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “சிப்பிக்குள் முத்து” சீரியல் – வைரலாகும் புகைப்படம்!
இதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள். சீரியலில் கதிர் மற்றும் முல்லை எப்போதாவது பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாலே மீனா புலம்ப ஆரம்பித்து விடுவார். நீங்க ரெண்டு பேரும் எப்போ பாத்தாலும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கீங்க, எனக்கு வாய்ச்சதும் இருக்கே என்று புலம்புவது காமெடியாக இருக்கும். இவர்கள் அன்பாக பேசிக் கொள்வது போல் காட்சிகள் மிகவும் அரிது. கடந்த வாரங்களாக புது கடையை திறக்க வேண்டும் என்று நடந்த பிரச்சனைகள் தான் சென்று வந்தது.
அதையும் மீறி கடையை திறந்து விட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர். மீனாவின் அண்ணன் ஜீவாவை குடிக்க வைத்து விடுகிறார். அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஜீவா, முதல்முறையாக மீனாவிடம் நீ நல்ல வசதியான வீட்டில் இருந்து வந்த பொண்ணு, எனக்காக ரொம்ப கஷ்டப்படுற, உன்ன மட்டும் நான் கல்யாணம் பண்ணலைனா, நான் ஒண்ணுமே இல்ல. ஐ லவ் யூ என்று கத்துகிறார். மீனா ஜீவாவை சமாதானம் செய்து தூங்க சொல்கிறார்.