144 தடை உத்தரவு அமல் – 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
144 தடை:
கர்நாடகாவில் பரவ தொடங்கிய கொரோனா மூன்றாம் அலை காரணமாக அம்மாநிலத்தில் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் பள்ளிகளுக்கு ஒரு வருடங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாகவே தினசரி வகுப்புகள் நடந்து வந்தது. இந்தநிலையில் ஓரளவு பாதிப்புகள் குறைந்து வந்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
சென்னை: தங்க நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த விலை! இன்றைய நிலவரம்!
இந்த நேரத்தில் ஓமிக்ரான் அச்சுறுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலையை குறித்த அச்சம் எழுந்தது. அதனால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியது. அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது. அதனால் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் நிகழ்ந்த கொலை சம்பவம் காரணமாக அந்த நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு விளக்கம்!
ஷிவமொகா நகரில் பஜ்ரங்ம் தளம் அமைப்பை சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று முன்தினம் இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு வன்முறையை தடுக்கும் வகையில் ஷிவமொகா நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.