புதிய ஊதியக் குறியீடு 2022-23 | PF முதல் அமலாக உள்ள மாற்றங்கள்! முழு விபரம் இதோ!

0
புதிய ஊதியக் குறியீடு 2022-23 | PF முதல் அமலாக உள்ள மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
புதிய ஊதியக் குறியீடு 2022-23 | PF முதல் அமலாக உள்ள மாற்றங்கள்! முழு விபரம் இதோ!
புதிய ஊதியக் குறியீடு 2022-23 | PF முதல் அமலாக உள்ள மாற்றங்கள்! முழு விபரம் இதோ!

புதிய ஊதியக் குறியீடு அடுத்த நிதியாண்டான 2022-23ல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய விதிகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதியக் குறியீடு:

2019ம் ஆண்டின் அரசு வெளியிட்டுள்ள ஊதியக் குறியீடு மசோதாவின் படி ‘ஊதியம்’ என்பதன் வரையறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படை சம்பள சதவீதத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு, ஓய்வூதியம், மற்றும் பிற மாற்றங்களை தவிர்க்க முடியாது. இதனால் ஊழியர்களின் கைக்கு வரும் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் வருங்கால வைப்பு நிதிக்கான நிறுவனத்தின் பங்கானது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

புதிய ஊதியக் குறியீடு ஏப்ரல் 2022க்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விதிகளின் கீழ் அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தின் செலவில் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். இதன் விளைவாக தனியார் தொழிலாள வர்க்கத்தின் இழப்பீட்டு முறையில் மாற்றம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளம் இப்போது குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். இந்த விகிதம் தற்போது மொத்த சம்பளத்தில் 30 முதல் 40% வரை உள்ளது. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும் போது மற்ற HRA, தொலைபேசி கட்டணங்கள் மற்றும் செய்தித்தாள் சந்தாக்கள் போன்ற பலன்கள் குறையும்.

உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ. 1 லட்சம் பெறும் பட்சத்தில் அடிப்படைச் சம்பளம் ரூ. 30,000-40,000 ஆகவும், மீதமுள்ள தொகை அலவன்ஸாகவும் இருக்கும். ஆனால் தற்போதைய புதிய விதிகளின் படி அடிப்படை வருமானம் இப்போது குறைந்தபட்சம் ரூ. 50,000 ஆக இருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் மற்ற படிகள் குறைக்கப்படும். PF என்பது உங்கள் அடிப்படை ஊதியத்தின் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படை சம்பள உயர்வால், வருங்கால வைப்பு நிதியும் உயரும். இதனால் ஊழியர்களின் கைக்கு கிடைக்கும் சம்பளத்தில் குறைவு ஏற்படும். புதிய ஊதிய விதிகளின் படி, HRA மீதான வரி அதிகரிக்கும்.

Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

ஏனென்றால், அடிப்படை சம்பள உயர்வால் ஊழியர்களின் வீட்டு வாடகை படியான எச்.ஆர்.ஏ., உயரும். இதனால் HRA இன் வரி அதிகரிக்கும். இருப்பினும், இந்த மாற்றம் குறைந்த வருமானம் உள்ளவர்களை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!