தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது பரவி கொரோனா பரவல் குறையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுக்கடைகள் மூடல்:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தற்போது 24,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் அனைவரும் சொந்த ஊர்களில் இருந்து பயணம் செய்து திரும்புவர், வெளியூர்களில் பணிக்கு செல்பவர்கள் அதிகளவு பேருந்துகளில் பயணிப்பர். அதனால் வரும் வாரங்களில் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் அரசை வலியுறுத்தி உள்ளார். கடந்த 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 16ம் தேதி ஊரடங்கை முன்னிட்டும் நேற்று தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று விடுமுறைகளுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்திருப்பதால் மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது வாங்கி செல்கின்றனர். இதனால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆவின் நூடுல்ஸ் முதல் பாயாசம் மிக்ஸ் வரை – 5 புதிய பால் பொருட்கள்! முதல்வர் அறிமுகம்!

கடந்த 2020 மே மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாள் ஒன்றுக்கு 775 ஆக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு முன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி மதுக்கடைகளை மூட வேண்டும் என்றார். தற்போது அவரது ஆட்சியில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 24,000 ஆக உள்ளது இந்த வேளையில் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!