தமிழக ரேஷன் கடைகளில் வரவிற்கும் புதிய மாற்றங்கள் – அரசின் முடிவு!
தமிழகத்தில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இந்த திட்டம் விரைவில் சோதனை செய்யப்பட்டு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ரேஷன் கடைகள்
தமிழக அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பல லட்சக்கணக்கான பயனர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இப்போது, தமிழகம் முழுவதும் மொத்தம் 35,323 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 10,279 நியாய விலைக்கடைகள் பகுதிநேர கடைகளாகும்.
Exams Daily Mobile App Download
இது தவிர ஒரு சில மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பில் புதிய ரேஷன் கடைகளை அமைப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? காரணம் இது தான்!
இந்த திட்டம் இப்போது சோதனை முறையில் இருக்கும் நிலையில், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அடுத்தக்கட்ட முடிவுகளை அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கடைகளை அமைத்து மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. இதற்காக தகுதியுள்ள நியாய விலைக்கடைகளை கண்டறியும் முயற்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.