தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? காரணம் இது தான்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிக அளவில் உருவெடுத்துள்ளது. இதனால் முன்பு போலவே தமிழக பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பினர் அச்சத்தில் இருக்கின்றனர்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிக அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், கொரோனா பரவல் குறைந்ததால் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு எப்போதும் போலவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுமுகமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உருவெடுக்க துவங்கி உள்ளது. இதன் காரணமாக அரசு தரப்பில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
பொது இடங்களில் முக கவசம் அணிந்திருத்தல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறினால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பின் 4ம் அலை பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு ஜூலை 12 விடுமுறை – இதற்காக தான்!
இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமின்றி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடுவதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து எந்த அமைச்சர்களும் பேசாத நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.