தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு ஜூலை 12 விடுமுறை – இதற்காக தான்!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாதனூர் ஒன்றியம் நாய்க்கனேரி ஊராட்சியில் வரும் ஜூலை 12 ஆம் தேதியில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை:
தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5410 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த டாஸ்மாக் கடைகளின் வாயிலாகத் தான் அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வந்தாலும் பல கோடி வசூலை அள்ளித்தரும் மதுபான கடைகளை மூட அரசு முன்வரவில்லை. மேலும், தமிழகத்தில் பெரும்பாலும் மதுபானக்கடைகள் சில முக்கிய அரசு விடுமுறை தினங்களில் மட்டுமே மூடப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில் மட்டுமே மதுபான கடைகள் மூடப்படுகின்றன. இருந்தாலும் கூட விதிமுறைகளை மீறி சில இடங்களில் விடுமுறை தினங்களில் கூட மதுபானம் விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாதனூர் ஒன்றியம் நாய்க்கனேரி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!
மேலும், வரும் ஜூலை 12 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதனால், மாதனுர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் ஜூலை12-ந்தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி மாதனுர் கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை திறந்தாலோ அல்லது மதுபானம் விற்பனை செய்தாலோ அந்த மதுபான கடைகளுக்கான உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.