எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மாற்றம் – தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு!

0
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மாற்றம் - தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு!
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மாற்றம் - தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு!
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மாற்றம் – தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு!

இந்தியாவில் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தடை செய்யப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களின் விரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

ஆசியாவில் உள்ள போக்குவரத்தில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே துறை உள்ளது. இந்த துறையின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் சேவையானது ஒரு வரப்பிரசாதமாக காணப்படுகிறது. இதற்கு காரணம், பேருந்துகளை விட ரயில்களில் கட்டணம் குறைவாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை நாடுகின்றனர். மேலும் பயணம் செய்யும் நேரமும் குறைவாக இருப்பதால் இந்த சேவையானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பு ரயில்களை தவிர எந்த ஒரு ரயில்களும் இயங்காமல் இருந்தது. கொரோனா காலத்தில் ரயில்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்வதால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் இந்திய ரயில்வே வாரியம் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்திருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி விட்டதால் இந்திய ரயில்வே வாரியம் அனைத்து ரயில் சேவைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதை தவிர ரயில்வே நிர்வாகத்தில் ரயில் சேவை பராமரிப்பு பணிக்காக பணிகள் நடைபெறும் பகுதிகள் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்வது வழக்கம்.

Common Wealth போட்டிகள் 2022 – இந்திய அணியின் 4ம் நாள் போட்டி அட்டவணை! முழு விவரம்

அந்த வகையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

1. விஜயவாடா to சென்னை சென்டிரல் (வண்டி எண்:12711) இடையே காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடூர் to சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. சென்னை சென்டிரல் to விஜயவாடா (12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை சென்டிரல் to கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கூடூரில் இருந்து மாலை
4.20 மணிக்கு இயக்கப்படும்.

3. நெல்லூர் to சூலூர்பேட்டை (06746) இடையே காலை 10.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை to நெல்லூர் (06745) இடையே காலை 7.45 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

4. சூலூர்பேட்டை to சென்டிரல் (06742) இடையே மதியம் 12.35 மணிக்கும், மறுமார்க்கமாக சென்டிரல் to சூலூர்பேட்டை (06745) இடையே அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

5. ஆவடி to சென்டிரல் (66000) இடையே அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!