ஆலியாவின் 2வது குழந்தைக்காக சொகுசு கார் வாங்கிக் கொடுத்த சஞ்சீவ் – குவியும் விமர்சனங்கள்!
விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகிய ஜோடிகள் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளதால் மீடியாவில் பல விமர்சனங்கள் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலியா மற்றும் சஞ்சீவ்:
தொடரில் ரீல் ஜோடியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் அவர்கள் ரியல் ஜோடியாக காதலித்து 2019 ல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் கார் மீது அதிக ஈர்ப்பு உள்ளவர் என்ற தகவல் வெளிவந்த நிலையில் அதை உண்மையாகும் வண்ணமாக கார்களை வாங்கி குவிக்கின்றனர். அவர்களது முதல் கார் 2020 ல் திருமணம் ஆகிய புதிதில் வாங்கியது. அதன் பிறகு அவர்களது முதல் குழந்தை ஐலா பாப்பா முதல் பிறந்தநாளுக்கு இரண்டாவதாக ஒரு கார் ஒன்றை வாங்கி ஆலியாவுக்கு பரிசாக கொடுத்தார்.
தனது 2வது குழந்தைக்காக ஆலியா மற்றும் சஞ்சீவ் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
மேலும் மூன்றாவதாக 40 லட்சம் மதிப்புள்ள கியா கார்னிவல் லிமோசின் என்ற காரை வாங்கி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்கள். இவ்வாறு அடுத்தடுத்து கார் வாங்கி வந்தவர்கள் மீண்டும் கடந்த மார்ச் மாதம் படு ஆக்டிவ் ஆக இருந்து வரும் ஆலியாவுக்கு அவரது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் 3 மில்லியன் தாண்டியதால் அதற்கு சஞ்சீவ் பரிசளிக்கும் விதமாக 30 லட்சத்தில் கூப்பர் என்ற காரை வாங்கினார். இவ்வாறு ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடிகள் 2019, 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 5 கார்கள் வாங்கியுள்ளார்கள்.
இதில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு காரை அவர்களது சகோதரனுக்கு பரிசாகவும், கூப்பர் காரை விற்றுவிட்டதாகவும் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து தெரிவித்தார்கள். இதையடுத்து ஆலியா இரண்டாவது குழந்தை மாசமானதை தொடர்ந்து தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மீண்டும் சஞ்சீவ் அவர்கள் ஆலியாவுக்கு மகன் பிறந்ததற்காக புது சொகுசு கார் ஒன்று வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். இதற்காக மனைவி மாசமான ஒரு கார், பிள்ளை பிறந்தா ஒரு கார், அது வளர்ந்தா ஒரு கார் என்று வரிசையாக காரா வாங்கி வருகிறீர்கள் என்று மக்கள் விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.