தனது 2வது குழந்தைக்காக ஆலியா மற்றும் சஞ்சீவ் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட ஒவ்வொரு அழகிய தருணங்களையும் வாழ்க்கை முழுவதும் நினைத்து சந்தோசப்படும் வகையில் ஆலியா மற்றும் சஞ்சீவ் ஒரு காரியத்தை செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா மற்றும் சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமான ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் அந்த தொடரில் நடித்ததன் மூலமாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அழகிய ஆண் குழந்தையை ஆலியா பெற்றெடுத்தார். அந்த கால கட்டத்தில் குழந்தை பிறப்பை நியாபகப்படுத்தும் வகையில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி ஆகியவற்றை எடுத்துவைத்து பத்திரப்படுத்தி கொள்வர்.
‘ஆலியா மருமகளா வந்தது நாங்கள் செய்த தவம்’ – மாமியார் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!
தற்போது உலகம் நாளுக்கு நாள் நவீன உலகத்திற்கு மாறி வருகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே பிரசவத்திற்கான ஒவ்வொரு மாதத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி நிறைய விஷயங்களை தாய்மார்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். முன்பெல்லாம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது போட்டோ எடுக்க கூடாது எனவும் குழந்தை பிறந்து முதல் மூன்று மாதம் புகைப்படம் எடுக்க கூடாது என கூறுவர். தற்போதெல்லாம் மாடர்ன் தாய்மார்கள் போட்டோஷூட்டை நடத்தி நியாபகமாக வீட்டிலேயே மாட்டி வைத்து கொள்கின்றனர்.
குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
ஆலியா மற்றும் சஞ்சீவ் இதற்கும் ஒரு படி மேலே சென்று ஆலியா கர்ப்பமாக இருக்கும் போது அந்த வயிற்றின் அச்சை படிவமாக செய்து வைத்துள்ளனர். மேலும், அந்த குழந்தைகளுக்காக தாய்ப்பாலில் வளையல், காப்பு, மோதிரம் ஆகியவற்றை செய்து நியாபகமாக வைத்துள்ளனர். குழந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். மீண்டும் அதே குழந்தை வயிற்றில் வளர போவதில்லை. இதனால் இருக்கும் ஒரு அழகிய தருணத்தை வருடம் முழுக்க பார்த்து ரசிக்கும் வண்ணம் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளனர். தற்போது அனைத்து தாய்மார்களும் இந்த அருமையான திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளனர்.