குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

0
குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்ட்!
குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த ட்விஸ்ட்!
குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

கோவிலில் பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க சற்று வாய்ப்புள்ளதாக குடும்பத்தினர்கள் கூறியதை நம்பி முல்லையும் பரிகாரம் செய்ய தயாராகியுள்ளார். இதற்கு பிறகாவது முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவருமே குழந்தை பெற்று கொண்டார்கள் நமக்கு மட்டும் தான் குழந்தை இல்லை என முல்லை ஏங்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கதிரும் முல்லையும் குழந்தை பிறக்குமா என்பதை தெரிந்துகொள்ள மருத்துவரிடம் செல்கின்றனர். முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர் கதிரிடம் கூறுகிறார். இதனால் வாயடைத்து போன கதிர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துவிடுகிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணம் அடைந்த கோபியின் அப்பா – ஷாக் ப்ரோமோ!

முல்லைக்கு மனதிற்குள் தனக்கு குழந்தை பிறக்காதோ என்கிற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் கதிருக்கு தெரியாமல் மருத்துவர் கொடுத்த ரிபோர்ட்டை எடுத்துக்கொண்டு வேறொரு மருத்துவரை பார்க்க செல்கிறார். அந்த மருத்துவர் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதற்கான அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். தன்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்று கொடுக்க முடியவில்லை என குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள். இதுக்குமேல் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என நினைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்பு முல்லையை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கதிர் அழைத்து வருகிறார்.

குடும்பத்தினரும் முல்லைக்கு ஆறுதல் கூறுகின்றனர். இருந்தாலும் தன்னால் குழந்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்கிற விஷயம் முல்லையின் மனதில் வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. இதன் பின்பு குடும்பத்தினர்கள் அனைவரும் கோவிலுக்கு பரிகாரம் செய்துவிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது என கூறுகின்றனர். முல்லையும் தனக்கு குழந்தை பிறந்தால் மட்டும் போதும் என நினைத்து பரிகாரம் செய்ய தயாராகிறார். குழந்தை பிறக்க சிகிச்சை எடுப்பதை விட்டுவிட்டு இது போன்ற பரிகாரங்களை செய்வது தான் முறையா என கதிர் மனதிற்குள் நினைத்து கொள்கிறார். முல்லை எப்போது தான் கர்ப்பமாவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!