விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணம் அடைந்த கோபியின் அப்பா – ஷாக் ப்ரோமோ!

0
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணம் அடைந்த கோபியின் அப்பா – ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணம் அடைந்த கோபியின் அப்பா – ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணம் அடைந்த கோபியின் அப்பா – ஷாக் ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபி- ராதிகாவின் காதல் உண்மை நிலவரம் பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராமமூர்த்தி தாத்தா இறந்து விட்டார் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கிப் பழகி வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவர் ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் சேர்ந்து கோவிலுக்குச் சென்றதை கோவிலில் வைத்து பார்த்த அவரது அப்பா கடுமையாக திட்டித் தீர்த்தார். இந்த குடும்பத்துக்கு துரோகம் பண்ண நினைச்சா வெட்டி போட்டு விடுவேன் என மிரட்டினார். இதை அடுத்து கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக மயூரா ராமமூர்த்தியிடம் சொல்ல, அதனால் தாத்தா ராமமூர்த்தி வருத்தம் அடைகிறார்.

இசை புயலுடன் கைகோர்த்த சன் டிவி பிரபல சீரியல் நடிகை கேப்ரியல்லா – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் இரண்டாவது முறையாக கோபியிடம் சென்று ராமமூர்த்தி பேசினார், நீ செய்றது தப்பு, அனைவரிடமும் உண்மையை சொல்வேன் என மிரட்டினார். அதற்கு கோபி , சொல்லுங்கள் என்று கூறினார், தாத்தா ராமமூர்த்தியும் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என மாடிப்படியில் இறங்கி வருகிறார். அப்போது தாத்தாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு கால் தவறி படியில் விழுகிறார். அவரால் இனிமேல் பேச முடியாது என டாக்டர் சொல்லி விட்டார். தொடர்ந்து வந்த எபிசோடுகளில் கோபி, பாக்யாவிடம் விவாகரத்து கடிதத்தில் கையெழுத்து வாங்கி விட்டார். கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? என்ற நோக்கத்தில் கதை தற்போது நகர்ந்து வருகிறது.

நேற்றைய முன் தினம் கோபி ராதிகாவுடன் பிக்னிக் சென்றதை எழில் பார்த்து விட்டார். மேலும் கோபியிடம் சென்று” இன்னைக்கு எங்க போனீங்க நீங்க ஒரு பெண்ணை அழைத்து கொண்டு காரில் ஏறுவதை நான் பார்த்து விட்டேன் என்றும் அவரிடம் கேட்கிறார், இறுதியில் உங்களை நான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் எழில். இதற்கிடையில் நாளுக்கு நாள் தாத்தா ராமமூர்த்தியின் உடல்நிலை தேறிக் கொண்டுவருகிறது. இந்நிலையில் தாத்தா உடல்நிலை மோசமாகி இறந்து போகவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் அந்த ப்ரோமோவில் எழில் செழியன் கோபி என அனைவரும் அதிர்ச்சி அடைய, பாக்யாவுக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. கோபி பற்றிய உண்மை இவருக்கு மட்டும் தான் முழுமையாக தெரியும் எனவே இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!