தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய செயலி அறிமுகம்!
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கால விரயத்தை தவிர்க்கும் வகையில் மொபைல் மூலம் ரேஷன் பொருட்கள் இருப்பை அறியும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றன.
நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
இதன் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கு மத்தியில் தமிழக கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது இனி வீட்டில் இருந்தபடியே ரேஷன் பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் வெகு நேரம் வரிசையில் காத்திருபாதால் கால விரயம் ஆகிறது. இதை தடுக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்ட ரேஷன் கடை திறந்திருக்கிறதா அதில் நமக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் ரேஷன் கடையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டால் புகார் அளிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.