நீட் தேர்வு 2022 எழுத திட்டமிட்டு உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள் இதோ!
2022ம் ஆண்டில் நீட் தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான முக்கிய விவரங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீட் 2022 தேர்வு:
தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய தேர்வாகும். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவு தேர்வு கடந்த 2 வருடங்களாக வழக்கத்தை விட தாமதமாக செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் வரும் 2022ம் ஆண்டு நீட் தேர்வு வழக்கம் போல் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிய வடிவில் வினாத்தாள்!
தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு, தேர்வின் விண்ணப்ப செயல்முறை ஜனவரி அல்லது பிப்ரவரி 2022 ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நீட் தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வின் செயல்முறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். முன்னர் தேர்வின் பாடத்திட்டம் CBSE பாடத்திட்டத்தில் 98% இருக்கும். ஆனால் தற்போது பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டிருந்த காரணத்தால் பள்ளிகளில் பொதுத்தேர்வின் பாடத்திட்டம் 30% குறைக்கப்பட்டிருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.
பாடங்களை தேர்வு வாரியம் அளித்துள்ள வெயிட்டேஜ் அட்டவணையின் படி, ஒவ்வொரு பாடத்தையும் கவனமாக படிக்கச் வேண்டும். இதனை படிப்பதற்கான அட்டவணையையும் தயார் செய்ய வேண்டும். அதிகபட்ச வெயிட்டேஜ் கொண்ட சேப்டர்களை முதலிலும், குறைந்த மார்க் கொண்ட சேப்டர்களை இறுதியாகவும் படிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் 180 வினாக்களுக்கு 180 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். இதனால் பல்வேறு மாதிரி தேர்வுகளையும், பழைய வினாத்தாளையும் வைத்து தேர்வு எழுதி பயிற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் குறைவான நேரத்தில் பதில் அளிக்கும் வகையில், பயிற்சி பெறுவது அவசியம்.
தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!
தேர்வுக்கு சமயத்தில் முன்னதாக படித்த பாடங்களை கவனமாக திருப்புதல் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இது போன்ற போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் குறிப்புகளும், புத்தகங்களும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அவற்றை சேகரித்துக் கொள்ள வேண்டும்.