அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிய வடிவில் வினாத்தாள்!
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2022 ஜனவரி 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வில் எளிமையான முறையில் மாணவர்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. இந்த ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. அதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது.
தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!
இந்த அறிவிப்பு மாணவர்கள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பியது. தேர்வுக்குரிய பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தி விட்டு தேர்வை நேரடி முறையில் நடத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஆனாலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது. இதையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2022 ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாள்!
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர், நேரடி தேர்வுக்கு மாணவர்கள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. ஆனால் தேர்வில் எளிமையான முறையில் வினாக்கள் கேட்கப்படும்.அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, நேரடி தேர்வு சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.