முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாள்!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர் வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொரோனா காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பாக அமைந்து வருகிறது. அதாவது கொரோனா பெருந்தொற்று பரவல் காலகட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்கள் பலர் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு – ஜன.10 கடைசி நாள்!
அதாவது இராமநாத செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் (GT/OC) காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி நியமனம் இனசுழற்சி அடிப்படையில் மற்றும் கல்வித்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களது சுயவிபரத்துடன் உரிய கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து வரும் ஜன.3ம் தேதிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்புமாறு அப்பள்ளி செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.