தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகையை அரசு வழங்கி வருகிறது. இதே போல் தற்போது அகதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.
நிவாரணத் தொகை
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது வரை 4.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த தொற்றில் பலியாகி வருவதால் அவர்களின் குடும்பம் அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
மேலும் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் முடிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50000 நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அகதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 9.1.2015-க்கு முன்னதாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்தவர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாள்!
இவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிப்பதற்கு இலங்கை தமிழர்கள் காவல் ஆய்வாளரால் வழங்கப்பட்ட வெளிப்பதிவு சான்றிதழின் நகல் அல்லது தற்போது புதுப்பிக்கபட்ட வெளிப்பதிவு சான்றிதழின் நகல் மற்றும் அனைத்து மாவட்டக் காவல் நிலையத்தில் பெறப்பட்ட வெளிப்பதிவில் வசிக்கும் இலங்கை தமிழர் பெயர் பட்டியல் மற்றும் தங்களின் விவர ஆவணங்களுடன் இணைத்து மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழக அரசின் ரூ.4000 நிவாரணத் தொகையை பெற முடியும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.