டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
நாட்டில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக குஜராத் அரசு மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு நேரத்தை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அதிகாரிகளின் அறிக்கையின்படி, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மகாராஷ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17) மற்றும் கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11) கேரளா (15), ஆந்திரா (1), சண்டிகர் (1), தமிழ்நாடு (1) மற்றும் மேற்கு வங்கம் (1) என்று ஆக மொத்தம் இன்றைய நிலவரப்படி 168 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தினமும் நிபுணர்களைக் கொண்டு நிலைமையை கண்காணித்து வருவதாகவும், கொரோனா முதல் மாற்றும் 2 ம் அலை பரவலின் அனுபவத்துடன் தற்போதைய பரவல் நிலைமைகளை சமாளிக்க முக்கியமான மருந்துகளின் ஸ்டாக்கை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாள்!
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை,மூன்று புதிய ஓமைக்ரான் வழக்குகள் ராஜ்கோட், அகமதாபாத் மற்றும் காந்திநகரில் தலா ஒன்று வீதம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் மொத்த ஓமைக்ரான் தொற்று எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ராஜ்கோட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 23 வயதான தான்சானியா நாட்டவர் புதிய கோவிட்-19 வகைக்கு நேர்மறை சோதனை செய்துள்ளார். மாணவர் PDU மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து குஜராத் வந்த 45 வயதான என்ஆர்ஐ மற்றும் ஒரு பையனுக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
காந்திநகரைச் சேர்ந்த 15 வயது சிறுவனும் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பிறகு ஓமைக்ரான் மாறுபாட்டுடன் கண்டறியப்பட்டதாக காந்திநகர் நகராட்சி ஆணையர் தவால் படேல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் வதோதராவில் வெள்ளிக்கிழமை இரண்டு புதிய ஓமைக்ரான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்து வரை ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குஜராத் அரசு மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு நேரத்தை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.