டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஸ்பானிஷ் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரபேல் நடால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். டென்னிஸ் போட்டிக்காக கடந்த வாரம் நடால் அபுதாபிக்கு சென்றதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரபேல் நடாலுக்கு தொற்று:
உலக டென்னிஸ் போட்டியின் வீரர்களுக்கான தரவரிசையில் 6வது இடத்தில் இருந்தார் ரபேல் நடால். சமீபத்தில் நடாலுக்கு காயம் ஏற்பட்டு டென்னிஸ் போட்டிகளில் விளையாட முடியவில்லை. காயம் சரியான பின்பு முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட போவதாக அறிவித்தார். அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு ஸ்பெயின் திரும்ப நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ICAR இல் வேலைவாய்ப்பு – ஜன.10 கடைசி நாள்!
ரபேல் நடாலுக்கு எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தம்மை தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தம்முடன் தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் தெரிவித்து விட்டதாகவும் ரபேல் நடால் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் நடாலின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
IPPB வங்கியில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!
35 வயதான டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு பலமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று முடிவு வந்தது. சென்ற வாரம் வெள்ளிக்கிழமை குவைத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட RT-PCR டெஸ்ட் கூட அவருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. அபுதாபியில் இருந்த ஸ்பெயின் திரும்பிய இன்று அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.