நீட் நுழைவுத் தேர்வு 2024 – விண்ணப்பங்களை திருத்த மீண்டுமொரு வாய்ப்பு!

0
நீட் நுழைவுத் தேர்வு 2024 - விண்ணப்பங்களை திருத்த மீண்டுமொரு வாய்ப்பு!

இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கு தற்போது இரண்டாவது முறையாக அவகாசத்தை NTA நீட்டித்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காண்போம்.

நீட் நுழைவுத் தேர்வு 2024:

தேசிய தேர்வு முகமையால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருந்து படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு கடந்த மார்ச் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 மொழிகளில் நீட் தேர்வு மே 5ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 18 முதல் 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

DRDO CFEES நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – ரூ.50,000/- மாத ஊதியம்!

அதன் பின் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல் 9 மற்றும் 10. அதனை பயன்படுத்தி ஏராளமான மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தியுள்ளனர். மீண்டும் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஏப்ரல் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண் திருத்தங்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு எனவும் மாணவர்களுக்கு என் டி ஏ தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!