திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா வசிக்க இருக்கும் வீட்டில் விலை இவ்வளவா? ஷாக் ரிப்போர்ட்!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பல படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. அவர் தனது காதலருடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் இருக்க புதிய அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா:
சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை நயன்தாரா. அவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பு திறமை காரணமாக காதாபாத்திரமாக மாறி மக்களின் பேசப்படும் அளவிற்கு பிரபலமாவார். மேலும் அவர் நடித்தாலே அந்த படம் ஹிட் தான். அந்த அளவிற்கு சிறந்த நடிகையாக சினிமாவில் இருக்கிறார். அதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரல் வீடியோ!
நயன்தாரா விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது எனவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அவர் தொலைக்காட்சியில் தெரிவித்தார். தற்போது அவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில் படங்களை முடித்துவிட்டு திருமணம் முடிந்து குடும்பத்தை மட்டும் கவனிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
பிரியங்காவுடன் முட்டிக் கொண்ட தாமரை, ஏற்றி விடுவது போல டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் – ப்ரோமோ ரீலிஸ்!
இந்நிலையில் திருமணத்திற்கு பின் நயன்தாரா தற்போது வசித்து வரும் எழும்பூர் வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு மாற இருப்பதாக தெரிவித்து பல நாட்களாக வீடு தேடி வந்தார். தற்போது அவர் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட் புக் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த ஒரு அபார்ட்மென்டின் விலை ரூ.18 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு விலை உள்ள வீட்டில் தான் தனது திருமண வாழ்க்கையை நயன்தாரா விக்னேஷ் சிவன் தொடங்க இருக்கிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.