தமிழகத்தில் நாளை (டிச.1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடை செய்யபடும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீரமெடுத்தது வருவதால் அங்கங்கே மின் கசிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. சென்னையில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டு மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் மின் பயனர்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் மின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மாவட்டம் தோறும் மின்சார்ந்த பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை – டிச.1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
அதனை தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் தவறாது நடைபெற்று வருகிறது. தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் தவறாது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்பட்டு மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு! உடனே பாருங்க!
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை கோவை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம், செல்வபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.