இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் 96 ஆயிரம் ஊழியர்கள் நியமனம் – நாஸ்காம் புதிய தகவல்!!
இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு 96 ஆயிரம் பேரை பணியமர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாஸ்காம் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
நாஸ்காம் அறிக்கை
கொரோனா தாக்கத்தினால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல வித பாதிப்புகளை தற்போது வரை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் வேலை இழப்பு. கடந்த வருடத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் எதிரொலியாக அனைவரும் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க முடியாத சுழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
இப்படியாக இருக்க, இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் நிறுவனங்கள் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தது. இதன் மூலமாக ஆண்டுதோறும் 30 லட்சம் ஊழியர்களுக்காக செலவழித்து வந்த 7 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயினை சேமிக்க முடியும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழலில் தற்போது நாஸ்காம் இது குறித்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக 96 ஆயிரம் பேரை பணியமர்த்த இருப்பதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள முதன்மையான 5 தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய பணியாளர்களை பணியமர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.