தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு:
இந்தியாவில் நீட் என்னும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 21க்கு பின் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!
மேலும் நீட் தேவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மருத்துவர் என்ற கனவு தமிழக மாணவர்களுக்கு நீட் தேவர்வால் நடைபெறாமல் போனது. தற்போது வரை தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆனலும் விலக்கு அளிக்கப்படவில்லை. தேர்வு நடைமுறையில் தான் உள்ளது. ஜூன் 17 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்து செய்ய திமுக முயற்சித்து வருகிறது எனவும் நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.