ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பெயர் நீக்க மார்ச் 31 கடைசி நாள்!
புதுவையில் ரேஷன் கார்டில் இருந்து இறந்தவர் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இறந்தவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை தவிர்க்க வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் தங்களின் ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டு:
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலமாக அரசு வழங்கி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. அதனால் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறைப்படி ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கைரேகை பதிவை வைத்து உணவு பொருட்களை பெற முடியும். அதனால் அந்தந்த கார்டுதாரர்கள் மட்டுமே அவர்களுக்குரிய உணவு பொருட்கள் கிடைக்கிறது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் உள்ளது. அதனால் அவர்க்குக்குரிய ரேஷன் பொருட்களும் சேர்த்து வழங்கப்படுகிறது. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் கூறியதாவது, குடிமைப்பொருள் வழங்கல் துறையால் பெறப்பட்ட ரேஷன் கார்டில் யாராவது இறந்திருந்தால் அவர்களின் விவரங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவரின் பெயரை உடனடியாக ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்கவில்லையென்றால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இறந்தவரின் பெயரை நீக்கம் செய்ய dcsca.py.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் பெயரை நீக்க இது தொடர்பான ஆவணங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக அதிகாரிகளால் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். பெயரை நீக்கமால் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் கூறியுள்ளார்.