தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜ சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி அந்த மாவட்டத்துக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் பா. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் விடுமுறை:
தமிழகத்தில் கோவில் நகரங்களுக்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் எண்ணற்ற கோயில்கள் உள்ளது. இது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். எனவே தமிழகம் ஒரு கோவில் நகரமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜ சுவாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது.
WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – Fake News கண்டுபிடிப்பது எப்படி?
சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என்று அழைத்து வருகின்றனர். மேலும் இந்த தேர் வரும் போது ஆரூரா…தியாகேசா என்று பக்தர்கள் முழக்கமிட பிரம்மாண்டமான முறையில் இந்த திருவிழா நடைபெறும்.
தற்போது இந்த தேர்த் திருவிழா வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட மக்களுக்கு உள்ளுர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொரோனா தொற்று அதிகமாகாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயமான முறையில் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் பா. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாவட்ட மக்கள் தேர்த் திருவிழாவிற்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.