மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – பெயர் பட்டியல் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது. 10வது தவணை வழங்குபவர்கள் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது எப்படி என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்:
விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 10வது தவணை வரும் டிசம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – இனி இதற்கு கட்டுப்பாடுகள்!
விவசாயிகளுக்கான இந்த திட்டத்தில் கீழ் தற்போது வரை பலர் இணையாமல் உள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் பலருக்கு பணம் சரியாக வந்து சேரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் பெயர், வங்கிக் கணக்கு விவரம், ஆதார், மொபைல் நம்பர் போன்ற தகவல்களை தவறாக வழங்கி இருந்தாலும் பணம் வந்து சேராது என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவி ஆனது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
10வது தவணையில் பணம் பெறுபவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக்கொள்ள முடியும். pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் உள்நுழைந்து Beneficiary Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஆதார் நம்பர் அல்லது மொபைல் நம்பர் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பின் Get Data என்பதை கிளிக் செய்ய வேண்டும். பணம் வழங்க இன்னும் குறைந்த நாட்களே இருக்கும்பட்சத்தில் சரிபார்த்து ஒருவேளை பெயர் இல்லாவிட்டாலும் அதில் அப்டேட் செய்வதன் மூலம் எந்த தடையும் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.