கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
கொரோனா தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் சிறப்பாக உள்ளது என ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. முதல் அலை மற்றும் இரண்டால் அலையின் தாக்கத்தை தொடர்ந்து கொரோனா 3ம் அலை பரவும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர். எனவே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் ஆக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
Post Office புதிய சேமிப்பு திட்டம் – ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2000 ரூபாய் வட்டி!
ஆய்வின் முடிவில் 45 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவும் அபாயத்தை குறைந்துள்ளதாக ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூயானது கொரோனா தொற்றுக்கு எதிராக 80% செயல்திறன் கொண்டுள்ளதாகவும்,கோவாக்சின் தடுப்பூசியானது கொரோனா தொற்றுக்கு எதிராக 80% செயல்திறன் கொண்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் தடுப்பூசியின் செயல்திறனானது 6 முதல் 8 வார இடைவெளியில் செலுத்தப்பட்ட டோஸ்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தேவை இல்லை எனவும் தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மே முதல் ஜூலை மாதங்களில் 11 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,073 பேருக்கு கடுமையான கொரோனா பாதிப்பும், 2,264 பேருக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் பெற்றவர்களும் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 – முதல்வரின் சூப்பர் திட்டம்!
இதில் 6% பேர் கடுமையான பாதிப்பும், 17% நெகடிவ் என கண்டறியப்பட்டவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியிருந்தனர். அதேபோல் 16% பேர் கடுமையான பாதிப்பும், 28% நெகடிவ் என கண்டறியப்பட்டவர்கள் கோவிஷீல்டு 1 டோஸ் மட்டுமே செலுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் 887 பேர் கடுமையான பாதிப்பும், 1,384 பேர் நெகடிவ் என கண்டறியப்பட்டவர்களுக்கு நடத்திய ஆய்வில் 3.4%பேர் கடுமையான பாதிப்பும், 5.3% பேர் நெகடிவ் என கண்டறியப்பட்டவர்கள் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தியிருந்தனர். ஆய்வின் முடிவில் முழுமையான தடுப்பூசியின் செயல்திறன் 69 விழுக்காடு என கண்டறியப்பட்டுள்ளது.