சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் – ஹைதராபாத்தை விட்டு வெளியேற திட்டம்?
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவருக்கு இடையிலான விவாகரத்து தொடர்பான பல சர்ச்சைகளும் சென்றுகொண்டிருக்கும் நிலையில், ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.
சமந்தா விவாகரத்து:
தமிழ் சினிமாவில் முதன்முதலாக மாஸ்க்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படத்தில் கவனிக்கப்பட்டாலும் பெரிய வரவேற்பு இல்லை. அதன்பிறகு, விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் அடுத்தடுத்து பல படங்களுக்கான வாய்ப்புகளை பெற்றார். கதை தேர்ச்சியில் கவனமாக இருந்து இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.
நாடு முழுவதும் அக்.31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு!
தெலுங்கு படம் ஒன்றில் நடைக்கும் போது நடிகர் நாக சைதன்யா அவர்களை காதலித்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2017ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்தது. இந்நிலையில், சமீபத்தில் சமந்தா நடித்து அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய பேமிலி மேன் 2 படத்தின் காரணமாக சமந்தா குடும்பத்தில் பல பிரச்சைனைகள் எழுந்ததாக பல வதந்திகள் பரவி வருகிறது. இதனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் இது தொடர்பாக இவர்கள் இருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமந்தா சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில்,“நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா’ எனக் கேட்டற்கு, “எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது என தெரியவில்லை. எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன் ” என சமந்தா பதில் அளித்துள்ளார். இதனால் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.