நாடு முழுவதும் அக்.31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு!
கொரோனா 2ம் அலையை தொடர்ந்து 3ம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 31-ந்தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் கோரதாண்டவம் ஆடத்தொடங்கியது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து கொரோனா பரவும் விகிதத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
TN TRB போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வு செயல்முறை!
நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நோய் பரவும் விகிதம் குறைந்து வருகிறது. மீண்டும் நோய் பரவும் விகிதம் அதிகமாவதை தடுக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தகவல் அனுப்பி உள்ளார்.
அதில்,
கொரோனா கால கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்றாவிட்டால், பண்டிகை காலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து விடும்.
- *தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும்கூட, வழக்கமான பண்டிகைகளை முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், கொரோனா கால கட்டுப்பாடுகளுடனும் கொண்டாட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது முக்கியம் ஆகும்.
- * கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பும், நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் சில மாநிலங்களில் உள்ளூர் பரவல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா வைரஸ், நாட்டின் சுகாதார சவாலாக நீடிக்கிறது.
- * பொதுமக்கள் கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகளில் தீவிரமான கண்காணிப்பு நடைபெற வேண்டும். அப்போதுதான் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தவிர்க்க முடியும்.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு? ஐகோர்ட் தள்ளுபடி!
- * கண்காட்சி, பண்டிகைகள், மத நிகழ்ச்சிகள் போன்றவை கொரோனா தொற்று அதிகரிப்புக்கு வழிநடத்திவிடலாம். எனவே மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாவட்டங்களில் தினசரி பாதிப்பு விகிதம், ஆஸ்பத்திரி மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிப்பதை வழக்கப்படுத்தி விட வேண்டும்.
- * எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
- * சாத்தியமான அதிகரிப்பு அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கியம். இதில், கடந்த 21-ந்தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியபடி உள்ளூர் அணுகுமுறை தேவைப்படும்.
- * பரிசோதனை, தடம் அறிதம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் ஆகிய 5 அம்ச உத்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
- * மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தகுதி வாய்ந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இரண்டாவது ‘டோஸ்’ போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- * மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுரைப்படி, கொரோனா வைரஸ் தொற்றை வலுவுடன் நிர்வகிப்பதற்கு மாவட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர்கள் வழங்க வேண்டும்.
- * மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அல்லது மாவட்ட அதிகாரிகள் இதையொட்டி பிறப்பிக்கும் உத்தரவுகள், முறையாக அமல்படுத்த படுவதற்காக பொதுமக்களிடமும், கள பணியாளர்களிடம் பரப்பப்பட வேண்டும். என கோரப்பட்டுள்ளது.